Thursday, August 22, 2019

திரௌபதியின் மயக்கம்

அன்புள்ள ஜெ




திரௌபதியின் மனத்தைச் சித்தரித்த மூன்று அத்தியாயங்களுமே ஒரே வீச்சில் அவளை முழுக்கவே நமக்குக் காட்டிவிடுகின்றன. இதில்தான் அவள் ஓர் அம்மா என்பது அழுத்தமாக நிறுவப்படுகிறது. அவளுக்குத் தன் பிள்ளைகளிடமிருந்த அன்பு, அபிமன்யூ மேல் இருந்த பாசம் எல்லாமே வருகிறது. துருபதரின் மகளாக இருந்து அம்மாவாக ஆனதுவரையிலான பரிணாமம் காட்டப்படுகிறது

இந்த அத்தியாயங்கள் குறுக்கும் நெடுக்குமாக பின்னப்பட்டுள்ளன. கடந்தகாலமும் நிகழ்காலமும் மாறிமாறி வருகிறது. குறுக்காக கனவும் நனவும் மாறி மாறி வருகிறது. இவ்வாறு பின்னியிருப்பதனால் இதை வாசிப்பது ஒரு சிக்கலான அனுபவம். அதேபோல போதையானதாகவும் இருக்கிறது. மொத்த போர்க்காலத்தையும் மீண்டும் சுருக்கமாகப் பார்த்ததுபோலவும் இருக்கிறது. அதேசமயம் சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் அவர்கள் இருந்த அந்த மயக்கநிலையையும் இந்தச் சிக்கலான கதைசொல்லும் முறை காட்டிவிடுகிறது.

வெண்முரசின் பொதுவான அத்தியாயங்களிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது

சரவணக்குமார்