Thursday, August 29, 2019

தீயின் மகள்




அன்புள்ள ஜெ

திரௌபதி தீயின் முன் நின்றிருக்கும் காட்சியைப் பார்த்தபோது என் உள்ளம் பல கோணங்களில் விரிந்தது. அவள் தீயின் மகள். இங்கே தீ அவள் மைந்தரை உண்ணுகிறது.ஆரம்பம் முதல் அவளுக்கும் தீக்குமான உறவு வந்துகொண்டே இருக்கிறது. அவள் தீயில் பிறந்தாள். அவள் காட்டை தீவைக்கும் காட்சி, அவள் ஆணைப்படி காண்டவ வனம் எரியும் காட்சி, அவளுடைய சபதம் தீயாக மாறி குருக்ஷேத்திரத்தை நிறைக்கும் காட்சி எல்லாமே ஞாபகம் வந்தது. அவள்தான் தீ. அப்படியென்றால் அங்கே ஐந்து மைந்தரைக் கொன்று தின்றுகொண்டிருப்பதும் அவளுடைய தீயேதான் இல்லையா?

ஜெயராமன்