Monday, August 19, 2019

சோர்வு




அன்புள்ள ஜெ

மெல்லமெல்ல ஆழ்ந்த மன அழுத்தத்திற்கும் சோர்வுக்கும் கொண்டுசெல்லத் தொடங்கிவிட்டது வெண்முரசு. இதில் போர் தொடங்கி ஓர் ஆண்டு ஆகிறது. முதல்நாவல் முதலே கொடூரமான சாவுகளும் இழப்புகளும் வந்துகொண்டே இருக்கின்றன. நிகழ்வுகளுக்கு சமானமாக கனவுகளும் வருகின்றன. கிரேக்கத்தொன்மக்கதைகளைப் போல தெய்வங்களும் ஊடாடிப் போர் செய்துகொண்டிருந்தன. ஆனால் ஒவ்வொரு நாளும் அடுத்து என்ன அடுத்து என்ன என்றே நாவல் சென்றுகொண்டிருந்தது. ஆகவே ஏதோ ஒருவகையில் அதைக் கடந்து வரமுடிந்தது. 6னின் சாவுடன் நாவல் ஒருவகையில் முடிந்துவிட்டது. அந்த எண்ணம் வந்தபின் நாவல் அந்தை மீட்டி மீட்டி மேலேகொண்டுசென்றுகொண்டேஇருப்பது பெரிய சோர்வை அளித்தது. வாசிக்காமலும் இருக்கமுடியவில்லை. வாசிக்கும்போது வரும் சோர்வையும் தாங்கமுடியவில்லை. நூறு ஆண்டு வாழ்ந்துவிட்டதுபோன்றஓர் உனர்வையே அடைகிரேன் என்ரு தோன்றுகிறது. இனி ஒன்றுமே அறிவதற்கும் அனுபவிப்பதுக்கும் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. கிராண்ட் என்ற சொல்லைத்தவிர ஒன்றுமே சொல்வதற்கில்லை

சுவாமி