Sunday, August 25, 2019

குந்தியும் திரௌபதியும்



அன்புள்ள ஜெ

திரௌபதியின் கதாபாத்திரமும் குந்தியின் கதாபாத்திரமும் அருகருகே வைத்து மதிப்பிடப்படும் இடம் இதுவரை வெண்முரசிலே வந்ததில்லை. இப்போது வாசிக்கும்போது அந்த ஒற்றுமையும் வேறுபாடும் ஆச்சரியப்படுத்துகின்றன. திரௌபதி தோற்றத்திலேயே அரசி. ஷத்ரிய குலத்தவள். யாதவகுலத்தைச் சேர்ந்த குந்தி அவளுடைய மனநிலையால் அரசி. எந்த தோற்றமும் இல்லாவிட்டாலும் கம்பீரமானவள்.

குந்தி மிகவும் சூழ்ச்சித்திறன் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதுமே எச்சரிக்கையாக எல்லாவற்றையும் பார்க்கிறாள். திரௌபதிக்கு இலட்சியம் உண்டு. கனவு உண்டு. ஆனால் அதைவிட்டு விலகவும் தெரியும். 9க்கு அது எதுவுமே தெரியாது. அதிகாரம் நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறாள். கடைசியில் குந்தி அந்த உச்சகட்டத்தில் முறிந்துவிடுகிறாள்.

ஆனால் திரௌபதி அந்த உச்சகட்டத்தில் விலகி நின்று பார்க்கிறாள். அவளுக்கு அது பெரிய அடியை அளிப்பதில்லை. குந்தியால் எல்லாவற்றையும் கடந்துபோக முடிகிறது. அவளுடைய மொத்த வெற்றியையும் அர்த்தமில்லாமல் ஆக்கும் அந்த உச்சகட்ட அழிவை தாளமுடியவில்லை. குந்தி உடைந்துவிழுகிறாள். திரௌபதி மேலே எழுந்து செல்கிறாள்.

இருவருடைய குணாதிசயத்திலும் இந்த ஆழமான வேறுபாடும் உள்ளது. பல ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த வேறுபாடே அவர்களின் குணாதிசயத்தை வரையறைசெய்கிறது

மகாலிங்கம்