Saturday, August 31, 2019

சிற்பம்



அன்புள்ள ஜெ

நலம்தானே? வெண்முரசு முடிவில் ஒரு சோர்வை எப்போதும் உணர்வேன். இந்தமுறையும் அது இருந்தது. ஆனால் இன்னொருவகையான நிறைவையும் அறிந்தேன். அது ஒரு தப்பான உணர்ச்சி என்றும் தெரிந்திருந்தது. அதாவது அனைத்தும் சரியாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒரு மிகப்பெரிய சித்திரம் பூர்ணமடையும்போது உருவாகும் ஒரு நிறைவு என அதைச் சொல்லலாம். ஆரம்பம் முதலே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவைக்கப்பட்டிருந்த எல்லா முடிச்சுகளும் சரியாக அவிழ்ந்து ஒன்றாக்விட்டன. சோகம் இருந்தாலும் இது ஒரு சிற்பம் போல சரியாக அமைந்துள்ளது என்றும் தோன்றியது

சிவராஜ்