Sunday, August 18, 2019

காத்திருப்பு



அன்புள்ள ஜெ

போர் நிகழ்ந்துகொண்டிருக்கையில் இங்கே குந்தியும் திரௌபதியும் காத்திருந்தார்கள். இரண்டுபேருமே போருக்காக காத்திருந்தவர்கள். இரண்டுபேருமே போருக்கான காரணங்களும் கூட. அவர்கள் எப்படிக் காத்திருந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி. அதை முன்பு சொல்லவே இல்லை. போருக்கு நடுவே அதைச்சொன்னால் வேகம் குறையும். ஆனால் இப்போது அவர்களின் எதிர்வினைகள் சொல்லப்படுகின்றன. அதிலும் திரௌபதில் எழுந்து அமர்ந்து மீண்டும் படுத்து கதவில் தட்டுவதை எதிர்பார்த்துக் காத்துக்காத்து உண்ணாமலும் உறங்காமலும் பதினெட்டு நாட்களையும் நகர்த்தும் காட்சி அபாரமாக உள்ளது.அவளுடைய அந்தத்தவிப்பை காலமில்லாத தன்மையை முன்பு நடந்தது இப்போது நடப்பது எல்லாவற்றையும் குழப்பி ஒரே நெரேஷனாக ஆக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். அதன் வீச்சும் ஆழமும் மலைக்கச் செய்கின்றன

சாரங்கன்