Thursday, August 22, 2019

வேங்கை




அன்புள்ள ஜெ

வெண்முரசில் சில விஷயங்கள் விரிவாகச் சொல்லப்படுகின்றன. சில விஷயங்கள் தொட்டுத்தொட்டு கடந்துசெல்லப்படுகின்றன. அந்த வகையான கடந்துபோகும் விஷயங்களில் ஒன்று என்னை அதிர்ச்சியடைய வைத்தது. கிருபரின் மாணவர்கள்தான் பாண்டவமைந்தர்கள் என்பது. குட்டிகளைத் தின்றுவிட்டுச் செல்லும் வேங்கைபோல் அவர் சென்றார் என்று பாஞ்சாலி சொல்லும் இடம். இந்தக்கோணத்தில் நான் யோசித்ததே இல்லை. ஆனால் இதை முன்பு புராணிகர் சொல்லியிருக்கிறார்கள். எங்கே இந்த விஷயம் மனித மனதில் வருகிறது? வெண்முரசில் தன் மைந்தர்களைக் கொல்லும் தந்தைபோல இருந்தார் பீஷ்மர் என்று போரின் ஆரம்பத்திலேயே வருகிறது..அதைத்தான் இந்த இடத்துடன் இணைத்துப்பார்க்கவேண்டியிருக்கிறது

சாரங்கன்