Monday, August 26, 2019

சிதைந்தவர்கள்




ன்புள்ள ஜெ


குந்தி சொல்லும் மேலே சொன்ன வரிகளிலிருந்து அஸ்வத்தாமன், கிருபர், கிருதவர்மன் ஆகியவர்களைப்பற்றி தெளிவாக வரையறை செய்துகொள்ள முடிகிறது. அவர்கள் வடிவம் சிதைந்த பொருள் போன்றவர்கள் என்கிறாள். அதாவது வடிவம் என்பது பத்துதிசையிலும் அழுத்திவைக்கப்பட்டு உருவாவது . வடிவம் சிதைந்தால் அது கட்டுப்பாடே இல்லாதது. அது அபாயகரமான பொருள். மனிதர்களும் அப்படித்தான் என்று குந்தி சொல்கிறாள். அந்த வரிகளை நான் தனியாக எடுத்து வாசித்தேன்.

நான் இதை முன்பே கண்டிருக்கிறேன். இதைச்சொல்லவே இதை எழுதினேன். கிரிமினல்கள் எல்லாருமே உடைந்த மனிதர்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் நார்மலான மனிதர்களே அல்ல. அதேபோல விபச்சாரிகளும் உடைந்துபோனவர்கள். ஆகவே அவர்களை நாம் பிரிடிக்ட் செய்யவே முடியாது. எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள். அதேபோலத்தான் இப்போது கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் உடைந்த மனிதர்கள்.

உடைந்த மனிதர்களை நாம் சமாளிக்கவே முடியாது. ஏனென்றால் நாம் உடையாத மனிதர்கள். நாம் நம்மைப்போன்றவர்களிடமே பழக முடியும். நாம் நம்முடைய வடிவத்தை வைத்தே அவர்களிடம் பழகிக்கொண்டிருக்கிறோம். அந்த வடிவமில்லா மனிதர்கள் நம்மை அலட்சியம் செய்வார்கள். நம்மால் பேசவே முடியாது. பேசினால் நாம் புண்படுவோம்.

இது நான் எண்பதுகளின் தொடக்கத்திலே ஒரு சேவைநிறுவனத்திலே வேலைபார்த்தபோது உணர்ந்த உண்மை


  

செந்தில்குமரன்