Sunday, August 25, 2019

உள்ளுணர்வு




அன்புள்ள ஜெ

குந்திக்கு ஆரம்பம் முதலே ஓர் உள்ளுணர்வு இருந்துகொண்டிருக்கிறது. ஆகவேதான் போர் முடிந்தது என்றதுமே முடியவில்லை என்று சந்தேகப்படுகிறாள். துரியோதனன் எங்கே என்று கேட்கிறாள். துரியோதனன் கொல்லப்பட்டான் என்றதுமே மற்றமூவரும் எங்கே என்கிறாள். அவர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற சந்தேகம்கூட மற்ற எவருக்கும் வரவில்லை. அனைவருமே அவர்கள் செத்துவிட்டார்கள் என்று வசதியாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு அவர்கள் அபாயகரமானவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.  எஞ்சும் நஞ்சு அபாயமானது, அது வளர்வது என்கிறாள். அவர்கள் இருக்கிறார்கள் பிள்ளைகள் தனியாக இருக்கிறார்கள் என்றதுமே இரண்டயும் அவள் இணைத்துக்கொள்கிறாள். ஆகவேதான் கிளம்பு கிளம்பு என்கிறாள். செல்லும்வழியிலேயே எல்லாமே தெரிந்துவிடுகிறது. அந்த உள்ளுணர்வு உண்மை என அவளுக்குத்தெரியும் இடம் கொடுமையானது. அவளுடைய விதி முடியும் இடம் அது. ஆகவேதான் அந்த உள்ளுணர்வு ஏற்படுகிறது. இதை வாழ்க்கையிலும் நிறையவே கண்டிருக்கிறோம்

சாரதா