Saturday, August 31, 2019

தீயின் எடை முடியும் இடம்




அன்புள்ள ஜெ,

வெண்முரசு தீயின் எடை முடியும் இடம் முக்கியமானது. துரியோதனன் தோளில் தூக்கி வளர்த்த பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அவருடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து அஸ்வத்தாமனும் பிறரும் வந்து அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை, அந்த நிலையின் அபத்தம். அவர்களின் வன்மம் அவர்களின் கண்களை மறைத்துவிட்டிருக்கிறது. அவர்கள் வேறொரு உலகில் இருக்கிறார்கள். துரியோதனன் அவர்கள் முன் தோன்றவே இல்லை. அந்த ஆழமான அமைதிபோல கொடுமையான பதில் வேறு இல்லை. நிறைவடையாத மூதாதையாகவே துரியோதனன் எஞ்சிவிட்டான்

கே.கணேஷ்