Friday, August 30, 2019

பெண்ணின் போர்



அன்புள்ள ஜெ

இது பெண்களால் துவக்கப்பட்ட போர். சத்யவதி, அம்பை, அம்பிகை அம்பாலிகை, காந்தாரி, குந்தி, திரௌபதி என்று ஒரு பெரும் வரிசை. அந்தப்போரின் இறுதி கொலைகளை, ஒரே அடியில் பல ஆயிரம் பேரை வீழ்த்துவதும் பெண் தான்.  என்ன ஒன்று, இதை 'செல்ப்-டிபென்ஸ்' என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

நகுலன் திரௌபதியை சந்திக்காமல் முதலில் பானுமதியை பார்க்க வருகிறான். ஆனால் அங்கும் அவன் முன் திரௌபதியே நிற்கிறாள். குருதி அலையடிக்கிறது.

இன்னொரு தளத்தில் காந்தாரத்தின் வெம்மை இந்திய மையநிலத்தில் பெய்துகொண்டே இருக்கிறது. முன்பு காந்தாரர்கள் வந்தபோது வெள்ளமாக வந்து வண்டலாக படிந்தது. இப்போது மணலாக பொழிகிறது. மண்ணுக்கு வளம் சேர்ப்பதில் பங்களிக்கிறது என்று கொள்ளலாம்.

மது