Thursday, August 15, 2019

துரியனின் மறைவு






அன்புள்ள ஜெ

துரியனின் மறைவும் தொடந்து வரும் காட்சிகளும் உள்ளத்தை இறுகச்செய்தன. அவனை ஒரு பேரரசன் என்ரு மட்டும்தான் என் மனம் வாங்கிக்கொண்டது. மண்ணாசை இருந்தாலென்ன என்றுதான் தோன்றியது. நன்மைதீமைகளை கணிக்க நாம் யார் என்றெல்லாம் நினைத்தேன். துரியோதனனின் சாவும் சரி அவன் அனாதைபோல எரிவதும் சரி நெஞ்சை அறுக்கும் காட்சிகள். ஆனால் அதில் ஒரு காவியத்தன்மையும் உள்ளது. கம்பராமாயணத்தில் ராவணன் கடைசியாகச் சாகும் காட்சியில் அவன் அவ்வளவு தனிமையாக இருப்பான். என் தமையன் தனியாக மாண்டுகிடக்கக்கூடாது என்று கும்பகர்ணன் சொல்வான். ஆனால் உண்மையில் தனியாகத்தான் கிடப்பான். அந்தத்தனிமை. மொத்த வெண்முரசிலும் எங்கேயும் துரியோதனன் தனிமையாக இருந்ததில்லை. ஆனால் இப்போது அந்த தனிமையை அடைந்துவிட்டான். இதுதான் முடிவு என்பது. கேவலஸத்வம் என்று இதைத்தான் சொல்கிறார்கள்

ஸ்ரீனிவாஸ்,.