Saturday, August 31, 2019

அம்புகள்



அன்புள்ள ஜெ

பீஷ்மரின் அம்புப்படுக்கையும் அஸ்தினபுரியில் காத்திருந்த அம்புகளும் எங்காவது இணைந்துகொள்கின்றனவா? எனக்கு அப்படி ஒரு மனப்பிரமை. அந்த அம்புகள் சத்யவதியால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்லவா? முதல்நாள் விதுரன் இளைஞனாகச் சென்று அந்த அம்புகளைப்பார்வையிடும் இடத்தை வாசித்தேன். யாருக்கான அம்புகள் இவை என்ற கேள்வி அங்கேயே இருந்தது. ஏனென்றால் அஸ்தினபுரியின்மேல் எவரும் படைகொண்டுவரப்போவதில்லை. அப்படியென்றால் அந்த அம்புகள் எவருக்கானவை?

அவை கைவிடுபடைகள். அஸ்தினபுரியின் எல்லா வீரர்களின் கைகளிலும் அவைதான் இருந்தன

குமரவேல்