Tuesday, February 24, 2015

ஐந்து



ஜெ,

வெண்முகில் நகரம் 19 ஆம் அத்தியாயம் ஒரு பெரிய ஆச்சரியம். அதில் ஒரு கட்டற்ர மொழி உள்ளது . ஆனால் ஏதேதோ வந்து விழுகிறது. முதலில் அது ஐந்து வேளை பூசை. ஐந்து காலங்களிலே நிகழ்கிறது. ஐந்து கூந்தல் கொண்ட தேவிக்கான பூசை

பஞ்சமகாரம் எனப்படும் மலர், மந்திரம்,மாவு, மாமிசம் மைதுனம். .அதன் பின்னர் ஏதேதோ ஐந்து ஐந்தாக வந்துகொண்டிருக்கிறது. ஐந்து கணவர்களாக உருவகித்திருப்பவை பல. ஐந்து செல்வங்கள். ஐந்து தொழில்கள். ஐந்து கீழ்மைகள் எல்லாமே கணவர்களாக வருகின்றன.

அதோடு ஐந்துமலர்கள். ஐந்து மணிகள், ஐந்து மரங்கள் என்று வந்தபடியே இருக்கின்றன. ஐந்தைப்பற்றிய ஒரு பெரிய மந்திரம் போல இருக்கிறது

இன்னும் பலமுறை வாசித்தபிறகுதான் ஒரு பட்டியலையே போடமுடியும்போல

ஆர்.சுப்ரமணியம்