Monday, February 23, 2015

ஐந்துயோகம்



ஜெ

வெண்முரசில் அந்த கபால யோகி வந்தபோதே நினைத்தேன், பாஞ்சாலி விஷயத்துக்கு ஒரு யோக அடிப்படையையும் அளிப்பீர்கள் என்று. அதைத்தான் கண்டேன். அந்த யோக விவரணை அற்புதமாக இருக்கிறது. சொல்லப்போனால் அந்த சாமுண்டிக்கு பலி கொடுக்கும் இடம் முதல் ஐந்து அம்மன்கோயில்களில் கும்பிடுவது, சுயம்வரம் வரை வந்து இந்த 19 ஆவது சாப்டர் வரை ஒரு தனி நாவலாகத் தொகுத்துவிடலாம். தமிழிலே உள்ள முக்கியமான ஒரு யோகநூலாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். காமமும் யோகமும் கலந்த நூலாக இருக்குமென்று நினைக்கிறேன்

சரவணன்

அன்புள்ள சரவணன்

பாஞ்சாலியின் கதையில் எல்லாமே ஐந்து ஐந்து என இருக்கிறது. இது தற்செயல் அல்ல. பஞ்சசிகாதேவி என்ற பழைமையான தெய்வம் தாந்தீர்க மரபில் உள்ளது. [பஞ்சசிகை என்பது  குழந்தைகளை பையன்களாக ஆக்கும் சடங்கு. ஐந்து குடுமி வைப்பார்கள்] அதைப்போன்ற ஏதோ தொன்மையான சடங்குகள் இதற்குப்பின்னால் உள்ளன என்று கேரளதாந்திரீக மரபிலே சொல்வார்கள்.

ஜெ