Tuesday, February 17, 2015

காமன்

அன்புள்ல ஜெ சார்

வெண்முகில்நகரத்தில் அர்ஜுனனை என்னால் ஒரு வகையிலும் சகித்துக்கொள்ளவேமுடியவில்லை. அவன் இந்திரனின் மகன். ஆனால் ஏன் இப்படி இருக்கிறான் என்றே தோன்றியது. அவனுடைய அந்த திமிரும் பெண்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத மனசும் கசப்பையே அளித்தன.

ஆனால் பாஞ்சாலி அவன் மேல் பைத்தியமாக இருக்கிறாள். அவனை ஜெயிப்பதற்காக முயற்சிசெய்தபடியே இருக்கிறாள். அதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஏனென்றால் இத்தகைய ஆணைப்போல பெண்ணை சுழற்றியடிக்கக்கூடிய புயல் வேரு இல்லை

கொல்லவும் முடியாமல் காதலிக்கவும் முடியாமல் பெரிய அவஸ்தையில்தான் காலம்பூரா அவள் இருக்கப்போகிறாள். அது நன்றாகவே தெரிகிறது. பாவம் என்று சொல்லத்தோன்றுகிறது

எஸ்