Sunday, February 8, 2015

கனியும் விதையும்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 


வெண்முகில் நகரம்-4-அற்புதம். மனம் கடந்து வந்தபாதையில் மீண்டும் சென்று கண்டு கொண்டது. அனுபவித்தது என்ன என்று சொல்லில் சொல்லத்தெரியவில்லை ஆனால் நிறைவான ஆனந்தம். இதை எழுதி நீர்த்துப்போக செய்ய விரும்பவில்லை. நன்றி. 

உள்ளம்போலவே உடலும் அணிசெய்யப்படவேண்டும் என்பதை விளக்கும் அந்த இடமும். பொருள் அடையாளம் கருவி இல்லாமல் தப்பித்துப்போகும் தருணம் வரும் வரை எங்கே தப்பித்துபோவது என்ற இடமும், விழுங்கப்படுவேனா என்ற பயமும் இன்றைய பூச்செண்டு. மொத்த மானிட குலத்திற்கான கனியும் விதையும் அதில் உள்ளது. 

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.