Sunday, November 30, 2014

கிருஷ்ணன் எனும் மர்மம்




அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை நாவலிலேயே வரும் சில உவமைகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள்

1. ஒருவனல்ல ஒரு கூட்டம்

2. வண்ணாத்தியின் மூட்டையிலிருந்து பலவகையான துணிகளை எடுத்து அணிந்துகொண்ட  பித்தன் போல

3 சீனர்களின் பெட்டி போல ஒன்றுக்குள் இருந்து ஒன்றாக வந்துகொண்டே இருப்பவன்

4  நடுவே எது வந்தாலும் வெட்டிச்செல்லும் வாள்

5  படகில் ஏறிக்கொள்ளும் குரங்கு

6 இருப்பக்கமும் பிடியும் கூர்மையாக இருக்கும் வாள்

7  கருவறைக்குள் இருக்கும் புராதனமான கற்சிலை

முதலில் சாதாரணத் தூதன். பிறகுவேதாந்தி. பிறகு  ராஜதந்திரி, பிறகு சின்னப்பையன். பிறகு மகத்தான போர்வீரன். பிறகுஒடுக்கப்பட்ட மக்களின் தளபதி. பிறகு அனைத்தையும் விலகி நின்று ஆற்றுபவன்..

இத்தனையையும் ஒன்றாகச்சேர்த்தால்தான் கிருஷ்ணன் என்ற enigma வை புரிந்துகொள்ளமுடியும்.

உண்மையில் கிருஷ்ணனின் முரண்பாடுகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு கவிஞர்களால் எழுதிச்சேர்க்கப்பட்டு ஒன்றானவை என்றும் அதனால் அது ஒரே பர்சனலிடி அல்ல என்றும் சொல்வார்கள்

நீங்கள் எப்படி ஒன்றாக ஆக்குகிறீர்கள் என்று பார்க்க ஆவலகா இருக்கிறேன்

பாஸ்கர்