Tuesday, November 18, 2014

வெண்முரசின் வழி

அன்புள்ள ஜெயமோகன் ஸார்

ஞாநி அவர்களின் நேர்மை குறித்து எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. ஆனால்
உங்கள் வெண்முரசு குறித்து அவர் கூறியது எனக்கு மிகவும் வருத்தம்
அளிக்கிறது.  அவர் வெண்முரசு படிக்க வில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.
நான் அந்த நூலை இன்னும் படிக்கவில்லை. அவரின் முயற்சியில் எனக்கு
உடன்பாடு இல்லை என்றாலும் இதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
படிக்காமல் கருத்து கூற விரும்பவில்லை என கூறும் குறைந்த பட்ச நேர்மை கூட
அவரிடம் இல்லாதது வியப்பளிக்கவில்லை. ஏனெனில் நீங்கள் செய்வது
மகாபாரதத்தின் மறு ஆக்கம்.  நான்கு வரி facebook வாசிப்பே வாசிப்பு என்று
இருந்த என்னை உங்கள் புத்தகங்களே நீளமான வாசிப்புக்கு பழக்க படுத்தி
வாசிப்பில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது.  இப்போதெல்லாம் fb பக்கம் போவது
மிக மிக குறைவு. முதன்மையானது உங்கள் வலை தளமும் புத்தகங்களும் தான்.

சிவக்குமார்
சென்னை