Friday, August 9, 2019

நாயகன்




அன்பின் ஜெ....


எவ்வளவு வருட பயணம்! நிலை அழிந்துவிட்ட இரண்டு தினங்கள்.... கர்ணன் இறக்கும் போது கூட இவ்வளவு வேதனைப்பட்டது இல்லை... மாற்று இல்லாமல் வெண்முரசின் நாயகன் துரியனே.. 

வேடன் உணர்ச்சி பீறிடும் வேங்கையின் குறி அறுப்பது போல்  இளைய யாதவன் துரியோதனின் யோக நிலையை தடுத்து போர்க்களத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறான். .....ஆம் .. மொத்தமும் இதுவரை அவன் செய்தது இதுவே..உச்சகட்ட கசப்பின் சுவை அவன்.... இனிப்பின் உச்சமும்  அவனே.....

விஜய் சூரியன்