Wednesday, December 14, 2016

இது கங்கை

 
 
சிறுமி  ஒருவள், தன் துணிப்பைக்குள் இருந்து, இது இமயம் , இது கங்கை என பாரதத்தை பரப்பிவைப்பது போல, மூன்றே அத்தியாயங்களில், காமநிறைவை சொல்லிவிட்டீர்கள். 

நான் , அவள் பெற்ற பிள்ளைகளை திரும்ப கேட்பாள் என்றே நினைத்திருந்தேன். 

கோல் சுழற்றியவளின் கன்ன சிவப்பும், குனிந்து மறுமொழி சொன்ன அர்ஜுனனின் குறுநகையும் , பரிவாரங்களுடன் வெளியேறும் இந்திரனும் மனதில் ஓவியமாகிவிட்டார்கள்.

நன்றி !

பேரன்புடன்,
ராஜா