Monday, December 12, 2016

உடல்



ஜெ

வெண்முரசில் அபூர்வமாக வரும் காமச்சித்தரிப்புகள் இதை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டுசெல்கின்றன. பெரும்பாலும் மனம் சார்ந்ததாகவே காமம் சொல்லப்படுகிறது. சிலசமயம் அது உடல்மட்டுமே ஆனதாகவும் வெளிப்படுகிறது. இந்திரநீலத்தில் துவாரகையின் பெண்களைச் சித்தரிக்கும் வர்ணனைகளை உச்சம் என்ரு சொல்வேன்

அவ்வகையில் இன்று பிருங்காஸ்வரன் இந்தியாவின் வெவ்வேறு நிலப்பகுதிகளிலுள்ள பெண்களை உணரும் இடம் நுட்பமானது. அவர்களின் உடலழகை அவன் அணு அணுவாக அறிவதாக வரும் பகுதிகளை பலமுறை வாசித்தேன். பெரும் பெண்பித்தர்தான் இதை எழுதியிருக்கமுடியும்

எப்படி அடங்கியிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை

சிவக்குமார்