Sunday, December 18, 2016

கீதை



ஜெ

வெதங்களுக்கும் கீதைக்குமான இந்த உவமை மிக அற்புதமானது. நான் சொற்பொழிவுகள் செய்து வருபவன். கீதையைப்பற்றி பேசுவேன். இந்த வரியை நான் இனி விடவே முடியாது என நினைக்கிறேன்

வெயிலொளியை பளிங்குருளையால் குவிப்பதுபோல 
அவன் வேதவிரிவை ஒற்றைமெய்மையென்றாக்குகிறான். 

அந்த வரியைத் தொடர்ந்து கீதையை மிகச்சரியாக வர்ணிக்கும் அடுத்தவரி வந்துவிடுகிறது

அது சுடர். எரித்தழிப்பதும் கூட.

கீதையைப்புரிந்துகொள்ள ஆப்தவாக்கியங்கள் போல உதவகின்றன இவை. இத்தனை நுட்பமான வரிகள் கதையோட்டத்தில் சாதாரணமான பேச்சாகக் கடந்துசெல்கின்றன. நானே எவ்வளவு கவனிக்காமல் விட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்

வெங்கடராமன்