Sunday, December 11, 2016

வெண்முரசின் சொர்க்கம்





அன்புள்ள ஜெ

வெண்முரசின் சொர்க்கம் ஒரு அபாரமான சித்தரிப்பு. ஒருபக்கம் அது தொன்மம். கருடபுராணத்தை ஒட்டி அமைந்துள்ளது. ஆனால் காண்பவனின் உள்ளிருந்தே எடுக்கப்பட்டு அக்கணமே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவன் விழி கொஞ்சம் அசைந்தால் அது மறைந்துவிடும். ஒரு கனவு. ஆனால் அங்கிருந்து பார்த்தால் வாழ்க்கை இன்னொரு கனவு

செல்வராஜ்