Tuesday, December 6, 2016

மழை



ஜெ


நம்பிக்கைகளை சூடியிருப்பவர்கள் கைக்குழந்தைகளை இடையில் வைத்த அன்னையரைவிட எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அமுதூட்டி நெஞ்சணைத்து துயில்கையில் விழித்திருந்து   பேணி வளர்க்கிறார்கள்.

என்றவரிக்காக நன்றி. நானும் அந்நிலையில் இருந்ததை நினைத்துக்கொள்கிறேன். எதையாவது உறுதியாக நம்பி நிலைகொள்ளும்போது ஒருவகை உறுதி கிடைக்கிறது. ஆனால் அது சிறையில் இருப்பதைப்போல சண்டனுடன் காற்றில் நடனமிடவேண்டுமென இப்போது ஆசைப்படுகிறேன்.

அர்ஜுனன் மழையை அறிவதும் இங்கே இவர்கள் மழையிலாடுவதும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று மயங்கிக்கிடக்கின்றன என் மனதில் மழை வந்துகொண்டே இருக்கிறது. மழைக்கு ஒதுங்குபவர்களும் மழையில் ஆடுபவர்களும் இருவகையினராக இருக்கிறார்கள்

மணிகண்டன்