Sunday, December 4, 2016

ஓவியங்கள்







ஜெ

சிலநாட்களாகவே சன்முகவேலின் ஓவியங்கள் மிகச்சிறப்பாக அமைந்து விடுகின்றன. இன்று குடித்துவிட்டு விருத்திரன் அமர்ந்திருக்கும் தோற்றம் அற்புதமாக உள்ளது. அதைப்போல நேற்று மேலே நின்று பார்க்கையில் புற்றிகபுரி அழிவதன் சித்திரமும் அற்புதமான நுணுக்கங்களுடன் இருந்தது. அந்தக்காட்சிக்குரிய உணர்ச்சி இன்றுதான் வருகிறது. மேலே இருந்து கௌமாரன் அதைப்பார்த்து ஏங்குகிறான்

 சன்முகவேல் ஓவியங்கள் வழியாக கற்பனையின் இன்னொரு எல்லையை நமக்குக் காட்டித்தருகிறார் என நினைக்கிறேன் விருத்திரன் குடித்துக்களிவெறி ஏறி அமர்ந்திருக்க வெளியே இருந்து காற்றுவந்து அவனை முட்டிமுட்டி எழுப்பமுயல்வதுபோல இருந்தது. நேர்முன்னால் அசுரத்தனமான கத்தி செயலிழந்து கிடக்கிறது. கீழே மதுக்கலம். அற்புதமான ஓவியம்



செல்வராஜ்