Wednesday, December 21, 2016

மகாநாராயணவேதம்



ஜெ

மகாநாராயணவேதம் என்று ராமாயணம் மகாபாரதம் பாகவதம் ஆகிய மூன்றுநூல்களை ஒன்றாகச்சேர்த்துச் சொல்வதுண்டு. ஐந்தாம் வேதம் என்றும் சொல்வார்கள். வேதத்தில் விஷ்ணு இல்லை. அதில் வரும் விஷ்ணு ஒரு ஆதித்யன் மட்டுமே. பின்னாளில் பிராமணங்களில் புருஷசூக்தத்திலிருந்து இந்த விளக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டும் மகநாராயணவேதம் என்று சொல்வதுண்டு. வேதங்களில் இருந்து இவற்றைநோக்கிய பயணம்தான் இதில் சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்

சுவாமி