Sunday, December 11, 2016

வெளிச்சம்





ஜெ,

சில இடங்களில் வெண்முரசு தரும் வெளிச்சம் அலாதியானது. நீங்கள் செய்யும் வேள்விகளால் மழைக்காலத்தில் சுனைகள் வளர்வதுபோல தேவர்கள் வளர்கிறார்கள் என்று வேதசுலோகம் ஒன்று உண்டு. வேதவேள்விகளால் தேவர்கள் எப்படி வளரமுடியும் என்று கேட்டால் பலவகையான பதில்கள் வரும்

வேள்விகள் என்பவை மானுடனின் நற்செயல்களே என்றும் அவற்றைச்செய்யும்போது நிகழும் பொற்கணங்கள் ஒவ்வொன்றும் ஒரு தேவனே என்றும் வாசித்தபோதுதான் அந்தவரியின் அர்த்தமே புரிந்தது

ஜெயப்பிரகாஷ்