Saturday, December 3, 2016

வென்றவனும் தோற்றவனும்






ஜெ

இன்றைய அத்தியாயத்தில் விருத்திராசுரனின் நிலையும் முன்புவாசித்த இந்திரனின் நிலையும் ஒன்றாகவே இருக்கிறது. வென்றவனும் மயங்கிக்கிடக்கின்றான் தோற்றவனும் மயங்கிக்கிடக்கின்றான். வென்றவன் என்னை எவருமே வெல்லமுடியாது என நினைக்கிறான். தோற்றவன் தன்னால் வெல்லமுடியாது என நினைக்கிறான். ஆச்சரியமான ஒரு இணைப்பு இது

இந்திரானி இருவருக்குமே மனைவி. அவள் இருவரிடமும் நேர்மையாகவும் கற்பாகவும்தான் இருக்கிறாள். இருக்குமிடத்தில் அவள் முழுமையாக இருக்கிறாள். இந்திரனைவெல்ல அவள் விருத்திரனைத்தூண்டுகிறாள் என்பது தவறாகவே படவில்லை

சண்முகம்