Tuesday, December 20, 2016

பெண்ணாதல்



ஜெ

அமராவதியில் இன்று வந்த அத்தியாயத்தில் அர்ஜுனன் ஊர்வசி சாபத்தால் பெண்ணாக மாறி அவைபுகும் காட்சி அபாரமான கற்பனை. மகாபாரதத்தில் ஊர்வசி தன் அன்னை என்பதனால் அவளை அவன் விலக்கினான் அவள் சாபம் இட்டு அதற்கு மீட்பும் அளித்தாள் என்று மட்டும்தான் உள்ளது. நீங்கள் அதை பல வகையில் மீட்டி விரிவாக்கிவிட்டீர்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமான ஒரு பெரிய நாடகமாகவே அது உள்ளது

அதன் உச்சியில்தான் நீ பெண்ணாகி என் தாபத்தை அறி என ஊர்வசி சொல்வது. பெண்ணானதுமே அவன் அதை அடைய ஆரம்பித்துவிட்டான். அந்த மாற்றம் அவனிடம் நிகழ்வதும் மகத்தான சித்தரிப்பு

ஷண்முகவேலின் ஓவியமும் அற்புதம்
சாரங்கன்