Friday, December 16, 2016

கதைகள்

 
 
அன்பு ஜெ,,

சில விடுபட்ட பகுதிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்..


நளதமயந்தி சரித்திரம்- வியாசரின் கை வண்ணம் மிக அருமை.தங்கள் எழுத்தில் தனியாகக் கூட எழுத வேண்டிய காவியம்.


யுதிஷ்டிரன் சூரியனிடம் பெற்ற அக்ஷய பாத்திரம் (கொஞ்சம் லேட்..என்னச் சொன்னேன்)

 
அர்ஜுனனுக்கு ஊர்வசி சாபம்,அகஸ்தியர் கதை, பகீரதன் கதை,ரிஷ்யசிருங்கர் கதை,பீமனுக்கு அனுமன் வரம், சத்யவான் சாவித்திரி இன்னும் கந்த புராணம் ஏன் இராமயணம் கூட  உள்ளது வன பர்வத்தில்.. 

 
ஜெயத்ரதன் துரோபதியை கடத்தும் படலம்  இனிமேல்தான் வரும் என நினைக்கிறேன். எல்லாவற்றையும் சொல்ல முடியுமா.. உங்களை விட எனக்குத் திகைப்பாக இருக்கிறது.

 
அன்புடன்,
இராஜேஷ்கண்ணன்.இராம்








அன்புள்ள இராஜேஷ்

வெண்முரசு அமைப்பை நீங்கள் கவனிக்கலாம். மகாபாரதத்தில் உள்ள கதையோட்டம் இதில் தொடரப்படவில்லை. மகாபாரதத்தில் துணைக்கதைகள் அடுக்கப்பட்டிருப்பதற்கு எந்த ஒழுங்கும் இல்லை. அவை பெரும்பாலும் பிற்சேர்க்கைகள். இத்தருணத்தில் இவர் இப்படிச் சொன்னார் - இதுவே கதையின் வடிவமாக அதில் உள்ளது

ஆனால் வெண்முரசு துணைக்கதைகளை ஒரு பெரிய தத்துவ விவாதத்தின் பகுதியாக அர்த்தபூர்வமாகத் தொடுக்க முயல்கிறது. இதன் வடிவம் இப்படித்தான் உருவாக்கிக்கொள்ளப்படுகிறது. ஆகவே பலகதைகள் முன்னரே வந்துவிட்டன என்பதைக் காணலாம். உதாரணமாக சத்யவான் சாவித்ரி கதை முன்னரெ சொல்லப்பட்டுவிட்டது

ஜெ