Sunday, December 18, 2016

பெண்






ஜெமோ

ஊர்வசிக்கும் அர்ஜுனனுக்குமான உரையாடல் நுணுக்கமான முறையில் பாலுறவின் பல தளங்களைச் சொல்லிச் செல்கிறது. சும்மா உரையாடுகிறார்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால் அதைக் கவனிக்கமாட்டோம். பலவரிகள் முக்கியமானவை

உதாரணமாக இந்த வரி

அவனை ஒவ்வொரு கணமும் சீண்டி உயிர்ப்பிக்கும் ஆணவத்தின் துளியொன்றை தானும் கொண்டிருப்பவளே நீங்கா விருப்பை அவனில் உருவாக்குகிறாள் அவன் அவள் ஊரும் வன்புரவி. பசும்புல்வெளியென்றும் பின்தொடையில் எப்போதிருக்கும் சவுக்கின் தொடுகையென்றும் தன்னை உணரச்செய்பவள்

இப்படிச் சொல்பவள் ஊர்வசி. அவள் அவனுடைய உள்ளே உறைந்த பெண். அவனுக்குள் இருந்து எழுந்து வந்து நிற்பவள்.  அவ்வாறென்றால் அவனைச் சீண்டும் பெண்ணை அவனே உருவாக்கிக்கொண்டிருக்கிறான்

ஜெயக்குமார்