Wednesday, February 27, 2019

அறம்



அன்பு ஆசிரியருக்கு,
        

 முதலில் பாரதப்போர் அறத்திற்கும் அறமீறலுக்குமான போர் என்றே எனக்கு உரைக்கப்பட்டது.நானும் அப்படியே நம்பினேன்.வெண்முரசும் அதைத்தான் காட்டுகிறது.ஆனால்,அறமீறல் செய்வது யார் என்பதில்தான் மாற்றம்.
   

போர் துவங்கியதில் இருந்தே பாண்டவர் தரப்பிலேயே அறம் என இதுவரை எண்ணிய அனைத்தும் கடக்கப்படுகின்றன.அதுவும் அறச்செல்வனென போற்றப்படும் யுதிஷ்டரின் ஒப்புதலுடன்.
  

கௌரவர் தரப்பின் பிழையாக கூறப்படும் அபிமன்யுவின் பலிக்குக்கூட யுதிஷ்டரே காரணமாகிறார்.அறச்செல்வர் இவர்கள் பக்கம் இருப்பதாலேயே அதனை மீற இவர்களால் முடிகிறது,அதற்கான காரணத்துடன்.அறம் கூற இருந்த விதுரரும் இல்லாததால் இவர்களால் எது அறம் உணரமுடியாமல் எந்த பாண்டவரையும் எந்த உபபாண்டவர்களையும் அழிக்காமல் ஒட்டு மொத்தமாக அழிகிறார்கள்.



பகுத்தறிவு என்பது நல்லதையும் கெட்டதையும் அறிந்து கெட்டதை செய்வது என கேட்டுள்ளேன்.இப்போது புரிகிறது அறத்தை அறிந்தவர்கள்தான் அதனை மீறுவதற்கான வழிகளையும் கண்டு மனச்சாட்சி குத்தாமல் மீறுவார்கள் என்பதை. 
       
            

கா.சிவா