Monday, February 25, 2019

போர்



மூத்தவருக்கு, வணக்கம். 

இளமையில் வியாசர் விருந்து படிக்கும்போது இறுதிப் 
போரே என் விருப்பமான இடம் . அம்மாவோ அதைப் படிக்காதே வீட்டிலும் 
சண்டை வரும் என தடுப்பாள். பிதாமகரின் 3 பாணங்களுக்கு பார்ததனின் 
பதில் 5 பாணங்களும், வருணாஸ்திரங்களும் மாயஸ்திரங்களும் நிறைந்த 
விறுவிறுப்பான யுத்தமல்ல இது. நெஞ்சுக்குமிழை அறுத்து உயிரடக்கும் யுத்தம். 
எவை எல்லாம் இது வரை நெறி என பேணப்பட்டணவோ அவை எல்லாவற்றையும் 
உடைத்தெறிந்து விளையாடுகிறான் கண்ணன். படைப்பின் வல்லமையால் 
நீங்களும். 
                

செழியன் கடக்க இயலா வெறும்முள்ளைக் குருதி வாரத் தாண்டி ஐசக் 
அடையும் தச்சன் மகன் அபிமன்யூவை, அகங்காரத்தை இழந்து பார்த்தன் 
அடையும் மெய்மை என நீங்கள் ஒரே கருத்தைத்தான் ஆலாபணை செய்வது 
போலிருக்கிறது. நளனுக்கு ஆண்டுதோறும் தூது விடப்பட்டாலும் ஒவ்வொரு 
முறையும் அது வேறு அன்னம் தானே. இறையின் கருணையால் இடைவெளி இன்றி வெண்முரசைத் தொடர்கிறேன்  

அன்புடன் 

இரா.தேவர்பிரான்