Monday, February 18, 2019

குருதிமணம்



ஜெ

சாத்யகி துரோணருடன் போரிட்டுவிட்டு திரும்பி வரும்போது தன்னுடைய ரத்தத்தின் மணத்தைத்தான் உணர்கிறான். அது அறிமுகமான மணமாக இருக்கிறது. ஒரு கணத்தில் அது அவனுக்குத் தன் மகன்களின் மணமாகத் தெரிகிறது. அதிலிருந்து அவன் வெறிகொண்டு எழுகிறான். உக்கிரமான ஒரு கவிதைப்போலிருந்தது இந்த இடம். தன் ரத்த மணத்தில் தன் பிள்ளைகளின் மணத்தை ஒருவன் நினைவுறுதல் என்பதை நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வெண்முரசின் உச்சமான நுட்பங்களில் இந்த இடமும் உண்டு

ராஜேந்திரன் எம்