Monday, February 18, 2019

விகர்ணனின் இறப்பு




அன்புள்ள ஜெ

விகர்ணனின் இறப்பு ஓர் அதிர்ச்சி. அதை வகுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவன் செத்தாகவேண்டும். இல்லாவிட்டால் அவன் சொன்னதெல்லாம் உயிர் தப்புவதற்காகச் சொன்னது என்றுதான் கருதப்படும். அவன் சபையில் துரியோதனனை கண்டித்த ஒரேகாரணத்தாலேயே மூத்தவன் தரப்பில் நின்று போராடி உயிர்விட்டிருக்கவேண்டும். அதை அவன் செய்கிறான். ஆனால் அவனை பீமன் கொல்வது பெரும்பிழை. ஆனால் அவனாலும் கொல்லாமலிருக்க முடியாது. ஏனென்றால் நூற்றுவரையும் கொல்வேன் என அவன் சபதம்பூண்டிருக்கிறான். அந்தச் சபதத்தை எடுக்கையில் அவன் விகர்ணன் பற்றி நினைத்தானா? ஆனால் அவன் கையால் விகர்ணன் சாகிறான். விதியின் தருணம் இது. மனிதர்கள் கையறுநிலையை அடையும் இடம். இந்தவகையான நுண்மையான இக்கட்டுகளை நாம் கிளாஸிக்குகளில்தான் பார்க்கமுடிகிறது

ராம்