Tuesday, February 19, 2019

போர்க்களம்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் போர்க்களம் மீண்டும் மீண்டும் வந்தாலும் போர் உத்திகளும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பதனால் சலிப்பில்லாமல் வாசிக்க முடிகிறது. கவசக்கோட்டை, அதற்குள் இருந்து எதிர்பாராமல் எழுந்து தாக்குவது சீனர்களின் போர்முறை. அதை இப்போது கொண்டுவந்திருப்பது பொருத்தமாக உள்ளது. மகாபாரதத்தின் இறுதிச்சிலநாட்கள் போர் மிகமிக நீளமாக செல்லும். பலர் கொல்லப்படும் காட்சிகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறேன்

ஜெய்கணேஷ்