Thursday, August 6, 2020

பகடை 2



அன்புள்ள ஜெ,

இரண்டு எலும்புகளிலிருந்து இரண்டு பகடைகள் உருவான கதையைப்பற்றி ஒரு கடிதம் கண்டேன். நான் ஏற்கனவே அதைக் கவனித்திருந்தேன். எனக்கு அதைப்புரிந்துகொள்ள கொஞ்சம் பிரச்சினை இருந்தது. ஆனால் அதைப்பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன்.வேதம் ஓத தன்னை அளித்தவனைவிட மேலா ஒரு அன்னையின் வெறி?

ஆனால் எது ஜெயிக்கிறது? அன்னைதானே? அதற்கு என் புத்திக்குத் தோன்றிய விடை இதுதான். இரண்டு யுகங்களின் நியாயங்கள் இவை. யுதிஷ்டிரர் கொண்டது கிருதயுகத்தின் அறம். துரியோதனன் கொண்டது கலியுகத்தின் அறம். கலியுகம் கிருதயுகத்தை ஜெயிப்பதையே அதிலே காண்கிறோம்

எஸ்.ராஜ்குமார்