Saturday, March 28, 2015

கதைவலை




அன்புள்ள ஜெ,

கதைகள் வழியாக தனியாக ஒரு பாதையில் வெண்முரசு இணைக்கப்படுகிறது. இந்தவகையான ஒரு secondary texture ஒரு நவீன இலக்கியத்திற்கு சாத்தியம் என்பதே ஆச்சரியம் அளிப்பதுதான். ஒரு படைப்பாளியாக இதுதான் மகாபாரதத்திற்கு நீங்கள் அளித்திருக்கும் கொடை

மகாபாரதத்திலே இந்த உதிரிக்கதைகள் எல்லாமே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனித்தனியாகச் சொல்லப்படுகின்றன. வெவ்வேறு காலகட்டங்களிலே சேர்க்கப்பட்டவை என்று சொல்லுகிறார்கள். இவையெல்லாம் ஒரு கலைக்களஞ்சியம் மாதிரியோ கதைக்கொத்து மாதிரியோதான் இருக்கின்றன. கதைகளுக்கு நடுவே இணைப்பு என்று ஏதும் கிடையாது

நீங்கள் அர்த்தபூர்வமாக ஒரு இணைப்பை உருவாக்குகிறீர்கள் . இந்த இணைப்பு முக்கியமானது. இந்த கதைகள் வரும் இடம் அந்த மையக்கதையை மேலதிகமாக விளக்குகிறது. அதேபோல இந்தக்கதைகளை மட்டும் கொண்டே மகாபாரததத்தையும் வேறுவகையிலே வாசிக்கமுடிகிறது

இந்த அமைப்புதான் இந்தியாவின் புராணக்கதைகளில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது. இதுதான் நம்முடைய அழகியல் என்று நினைக்கிறேன்

சண்முகம்