Sunday, March 15, 2015

தீயிலிருந்து வந்தவள்



அன்புள்ள ஜெ சார்

கர்ணனுக்கும்பாஞ்சாலிக்குமான உறவுக்குள் என்ன நடக்கிறது என்பது பூடகமாகவே போய்க்கொண்டிருக்கிறது. உடைத்துச் சொல்லமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவனும் அதிகம் பேசக்கூடியவன் இல்லை. அவளும் அளந்துபேசுபவள். அந்த உற்வு ஒரு கண்ணுக்குத்தெரியாத விஷயமாகவே இருக்கும் இல்லையா?

அந்தப்போரைக்காண அவள் வருவாள் என்று கர்ணனுக்குத்தெரியும் என்று தோன்றியது. அவள் வராமலிருக்கமாட்டால். அவளுடைய இயல்பே அதுதான். அவள் தீயிலே உதித்தவள் இல்லையா?

அவள் வந்து நின்றிருக்கும் இடத்தை நீங்கள் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் பூர்சிரவஸ் வழிகாகச் சொல்லவந்தபோது வெறும் சின்னக்குறிப்புகளாகவே சொல்லிவிட்டீர்கள். அது ஆழமானதாக இருக்கிறது. நிறைய ஊகிக்கவைக்கிறது

அருணா


வண்ணக்கடல் பற்றி கேசவமணி


மழைப்பாடல் பற்றி கேசவமணி