Sunday, March 22, 2015

இணையர்




ஜெ சார்

இன்றைய அத்தியாயத்தில் திரௌபதி அவளுடைய மனதில் இருக்கும் வெண்முகில்நகரத்தைப்பற்றிச் சொல்லும் இடம் அற்புதமானது. நுணுக்கமான தகவல்களுடன் அவள் அதை முழுமையாகவே மனசுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறாள். ஆனால் எவரிடமும் சொன்னதில்லை. அவள் பாண்டவர்களை திருமணம் செய்வதற்கு முன்பே இதையெல்லாம் செய்துவிட்டாள். அப்படியென்றால் அவளுக்கு பாண்டவர்கள்தான் கணவர்கள் என்பது முன்னரே உறுதியாகத் தெரியும். தெரிந்தபிறகுதான் கர்ணனைக் கண்டு காமமே கொள்கிறாள்

கிருஷ்ணனும் அவளும் பேசிக்கொள்ளும்போது இருவரும் ஒருவரே என்றுகூட தோன்றுகிறது. கிருஷ்ணன் கிருஷ்ணை என்றுதானே அவர்களுடைய பெயர்

இந்திரப்பிரஸ்த வர்ணனையும் அபாரம்


சிவம்