Tuesday, August 4, 2020

செந்நா வேங்கை செம்பதிப்பு


அன்புள்ள ஜெ,

இன்று மதியம் செந்நா வேங்கை செம்பதிப்பு கூரியரில் அனுப்பப்பட்டுள்ளதாகப் பதிப்பகத்திலிருந்து மின்னஞ்சல் வந்தது. ஆனால் வெள்ளி மதியமே கூரியர் வந்துவிட்டது. மூன்று நாள் தனிமைப்படுத்தி வைத்து இன்றுதான் பிரித்தேன். வீடடங்கு கால நெருக்கடிகளால் உங்கள் கையெழுத்தை எதிர்பார்க்கவில்லை. பிரித்து உங்கள் கையெழுத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி. நன்றி. விரைவில்  மீதமுள்ள செம்பதிப்புக்களும் வெளியாகும் என்று நினைக்கிறேன்.

பன்னிரு படைக்கலத்தில் இருந்து வெண்முரசைத் தினமும் தொடர்ந்து வந்தேன். நிறைவிற்குப்பின்,  முதற்கனலை ஆரம்பித்துள்ளேன். பழக்கப்படி தினமும் ஒரு அத்தியாயம் என்பது திட்டம். ஆனால் குறைந்தது 3 அத்தியாயம் செல்கிறது. கூடுதலாக நூல்வடிவில் வாசிக்க செந்நா வேங்கையும் கிடைத்துள்ளது. நன்றி!

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை