Monday, August 3, 2020

நாற்களம்


அன்புள்ள ஜெ

கல்பொருசிறுநுரையில் வரும் இந்த வரியை இன்றைய வரியாக என் கம்ப்யூட்டரில் பொறித்துக்கொண்டேன். 

தன்னை தானே வகுத்துக்கொள்பவனே பிறரை ஆள்கிறான், பிறரால் வகுக்கப்படுபவன் எப்போதுமே நாற்களத்தின் காய் மட்டுமே.

என் நண்பர்கள் இது என்ன என்று கேட்டபோது சும்மா கூகிள் டிரான்ஸ்லேட்டில் கொடுத்துப்பார்த்தேன். ஏறத்தாழ சரியாக வந்தது. 

He who defines himself rules others, and he who is defined by others is always the piece of the chessboard. 

நண்பர்கள் பலர் அதை வாட்ஸப்பில் மேற்கோளாக கொடுத்தார்கள். ஒருவரி ஒருநாள் முழுக்க கூடவே இருப்பது வெண்முரசு வந்துகொண்டிருந்தபோது தொடர்ந்து நிகழ்ந்தது. இனிமேலும் அப்படித்தான்

ஜெயராஜ்