Monday, August 3, 2020

மலர்கள்


அன்புள்ள ஜெ

பிரயாகையில் திரௌபதியின் திருமணத்தில் இந்த இடம் வருகிறது

பாஞ்சாலத்தின் ஐந்து குலங்களைச்சேர்ந்த மூத்தார் ஐவரும் அவர்களின் குலங்களுக்குரிய ஐந்து மரங்களின் மலர்க் கிளைகளைஇடக்கையில் ஏந்தி மணமுற்றத்துக்கு வந்தனர். துர்வாசகுலத்திற்கு வேங்கையும், சிருஞ்சயருக்குமருதமும், கிருவிகளுக்கு கொன்றையும், சோமகர்களுக்கு செண்பகமும், கேசினிகளுக்கு பாலையும்.மருத மரக்கிளையை அர்ஜுனனும், வேங்கையை பீமனும், கொன்றையை நகுலனும், செண்பகத்தை சகதேவனும்பெற்றுக்கொண்டனர். தருமன் பாலைக்கிளையை வாங்கிக்கொண்டான்.

இப்பகுதியை ஒரு டைரியில் குறித்து வைத்திருந்தேன். இந்த இடத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாவலின் கடைசிவரை வாசித்து இதன் அர்த்தமென்ன என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்

அர்ஜுனனுக்கு மருதம். அது காமத்தின் மரம். பீமனுக்கு வேங்கை. அது குறிஞ்சித்திணைக்கு உரியது. காதல். கொன்றை நகுலனுக்கு. செண்பகம் சகாதேவனுக்கு. யுதிஷ்டிரனுக்கு ஏன் பிரிவு, துயர் ஆகியவற்றின் அடையாளமான பாலை?

செந்தமிழ்க்கிழார்