Thursday, October 22, 2015

ஐந்து

ஜெ

தேவலோகத்தில் ஒரு பொன். அதன் ஒருதுளிதான் குபேரலோகம். அதில் ஒரு ஆசை. அதன் ஒரு துளிதான் மனிதனின் அக உலகம். அதிலே ஒரு துளிதான் புறவுலகம். பூர்ணரின் தவமும் அவர் சென்றடைந்த இடமும் அதிலிருந்து வீழ்ச்சி அடைவதும் நுட்பமானவை

ஐந்து கேள்விகளையும் ஐந்து சுனைகளில் உள்ள முதலைகள் கெட்பதாக வாசித்தபோது நாவல் மேலும் மேலும் என விரிந்துகொண்டே சென்றது. காவியகுணமே இதுதானே?

ராமச்சந்திரன்