Thursday, October 1, 2015

அர்ஜுனனின் பயணம்

அன்புளயி ஜெயமோகன் அவர்களுக்கு,


வெண்முரசின் ஒவ்வொரு நாவலும் புதிதாக தொடங்கும் போதும், உள்ளே நுழைய கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கின்றது. இந்த முறை, முதல் சில அத்தியாயங்களுக்குள் நுழையவே முடியவில்லை. வழி தவறியது போல. அர்ச்சுனன் வந்த பின்னரே மறுபடியும் பழகிய வழிக்கு வந்தது போன்ற திருப்தி.

ஒரு புதிய உலகையே கண்முன் காட்டிவிட்டீர்கள். வெண்முரசின் ஆரம்பத்திலும் நாகர்கள் வருகின்றார்கள். இங்கும் வருகின்றார்கள். காண்டீபத்தில் வருகின்ற நாகர்களின் உலகம் முழுக்க முழுக்க கற்பனையாக இருக்காது, அதற்கு ஒரு மூலம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.  இவர்களும், இன்று நாகாக்கள் என்று சொல்லப்படுவர்களும் ஒன்றா? 

மீண்டும் பீமனை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்.


நன்றி

ரெங்கசுப்ரமணி
அன்புள்ள ரெங்கசுப்ரமணி
இதில் பீமன் இல்லை.
அர்ஜுனனின் பயணங்கள் மட்டுமே 

யுலிஸஸின் வீரப்பயணத்தை பின்னாளில் ஐரோப்பிய காவியகர்த்தர்க்ள் அகப்பயணமாக விளக்கினர். அதைப்பொல என்று சொல்லலாம்
ஜெ