Saturday, October 24, 2015

அடுக்குகள்

ஜெ

ஐந்து பிராணன்களும் ஐந்து குளங்கள். அதில் வாழும் ஐந்து முதலைகள். அழுதுகொண்டே இருக்கின்றன அவை. விடுதலைக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றன. முதல் பிராணன் உடல்முழுக்க ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசி பிரானனாகிய அபானன் மேல்நோக்கி கொண்டுசென்று விடுதலை அளிக்கிறது. இது ஒரு வாசிப்பு

அந்த ஐந்து பிராணன்களும் அர்ஜுனனின் ஐந்து பெண்கள். ஒருத்தி ஆழம். அவள்தான் அம்மா. அடுத்தவள் தீ. அடுத்தவள் காற்று. அடுத்தவள் பால். கடைசிப்பெண் ஒளி. ஆனால் நான்குபேரும் அம்மாவின் வடிவங்கள்தான். இது ஒரு வாசிப்பு

இப்படி வாசித்துக்கொண்டே செல்வதற்கு நிறைய இடமிருக்கும் கதை. இதன் குறியீட்டுச்செறிவை எப்போது அவிழ்த்துமுடிக்க

சாரங்கன்