Tuesday, October 27, 2015

பிழைகள்

தேரோட்டி -5

இனிய ஜெயம்,


மற்றொரு கூர்மையான அத்யாயம்.

உண்மையில். தெரியாமல் செய்துவிட்டேன் என்ற சொல் ஒரு மாபெரும் பொய். தான் இன்னது செய்கிறோம் என்று செய்யும் கணத்தில் அறியாத ஒரு அகமும் இல்லை. இது என்னிலிருந்து எப்படி வெளிப்பட்ட்டது. நானா இதை செய்தேன் என்று ஆச்சர்யம் வேண்டுமானால் கொள்ளலாமே அன்றி தெரியாமால் மட்டும் செயா முடியாது.

இதுதான் கதன் கேள்விஇக்கு அர்ஜுனனின் பதிலின் சாரம்.

'' இவர்கள் பிழையீடு செய்ய ஏன் இவ்வளவு தொலைவு வருகிறார்கள்?''

'' காரணம் இத்தனை தொலைவு சென்றே அந்த பிழையை செய்திருக்கிறார்கள்''

தெய்வங்களே வந்து தாண்டித்தாலன்றி இவர்களின் அகம் ஆறாது. எப்பேர்ப் பட்ட பிழை.

எனில் கால் தவறி இறந்தவர்கள், அந்த தண்டனை கூட கிடைக்காது எனும் அளவு பெரும் பிழை செய்தவர்கள்.

தெய்வங்களும் தண்டனை தர மறுதலிக்கும் அப் பெரும்பிழை எது.

ஆற்றவே ஒண்ணாத எட்டாவது பிழை.
கடலூர் சீனு