Tuesday, August 4, 2020

களிற்றியானை நிரை


அன்புள்ள ஜெ

வெண்முரசின் களிற்றியானை நிரையை வாசித்துக்கொண்டிருக்கிறேன் மானுடர் பிறருக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக எண்ணுவது ஆணவத்தால் மட்டுமே. எவரும் பிறரை இயற்றவில்லை, எவரும் பிறரை சுமந்திருக்கவும் இல்லை.என்ற வரி இன்றைய கொள்முதல். அது ஒருவகையில் இயல்பான ஓர் உண்மை. ஆனால் இத்தனை பக்கங்களுக்கு போரும் பூசலும் அழிவும் நடந்து இத்தனை மனக்கொந்தளிப்புகளுக்குப்பின்னர் வாசிக்கும்போது பெருமூச்சுதான் வருகிறது

சாரதா