Sunday, March 1, 2015

வண்ணங்கள்



ஜெ

வெண்முகில்நகரம் தொடங்கியபின்பு தொடர்ச்சியாக தீவிரமே இருந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு பகுதியும் மூன்று அடுக்கு. ஒன்றில் ஆழமான தத்துவக்கேள்விகள். ஒன்றில் உறவுச்சிக்கல்கள். ஒன்றில் தொன்மங்கள். மூன்று அடுக்குகளையும் ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு வாசிப்பது பெரிய சவாலாக இருந்தது. செறிவான நடை வேறு. அந்தகன் கதைக்கும் அர்ஜுனனுக்கும் என்ன தொடர்பு என்றே ஒருநாள் முழுக்க சிந்தனை செய்தேன்

ஆனால் பிறகு பூரிசிரவஸின் கதை ஆரம்பித்தபோது ஒரு விடுதலை. இனிமையான காதல்கதை போல. அழகான நிலம். இந்த இனிமை முந்தைய தீவிரத்தை அழகாக ஈடுசெய்கிறது.இருண்ட குகைவழியாக வந்து வண்ணங்கள் நிறைந்த நிலத்தில் இறங்கிய விடுதலை

தேவிகையை பூரிசிரவஸ் சந்திக்கும் இடம் அழகு. 

செல்வா